Thursday, December 26, 2013




தமிழோவியம் இங்கு உயிரோவியமாய் ..!

அழகு மலைகளில் தவழும் குளிரே..!
மருகும் மலர்களில் உறங்கும் அரும்பே..!
தவழும் முகில்களில் பிறக்கும் மழையே..!
மருத வயல்களின் இனிக்கும் கரும்பே..!

கனிகள் அடுத்த கனிந்த சுவையே..!
பனியில் வெடித்த பைந்தமிழ் மலரே..! 
இனித்தம் எடுத்த பெண்மை ஒளிரே..!
மனிதம் விதைத்த மேன்மை அழகே..! 

No comments:

Post a Comment